Dear Readers,
Am posting the following comment that i registered in "Keetru" in response to some "Theo" from "Sathya Kadasi" in this post: http://keetru.com/literature/essays/pa_seyaprakasam_2.php. Since am not sure they would release it considering its length i had the second thought of posting it here too. I apologize for the inconvenience of writing this in English. Am sorry to inform that for the present moment i dont have the necessary tools to write in Tamil. Hope would soon be able to write in detail on this matter in Tamil.
Thanks,
valar ...
Dear friends following this debate here,
Sorry that i couldn't type in Tamil here since i don't have the proper access to the net or the relevant soft wares for now.
However having noticed a comment from "Sathya Kadadasi" by some dear person named "Theonis" i felt it imperative to respond here.
The following part from Mr. Thoenis' comment drew my attention.
//நாகார்ஜுனனின் வலைப்பதிவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விவாதம் ஒன்றில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்தும் இந்தத் தருணத்தில் பேசிவிடலாம். நோம் சோம்ஸ்கியில்தான் விவாதம் ஆரம்பித்தது. விவாதத்தின் தொடர்ச்சியில் இன்றைய நிலையில் புலிகளை விமர்சனத்தோடு ஆதரித்தேயாக வேண்டும் என்றும் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது.//
The fact of the matter can be discerned easily if readers take the trouble of resorting to the particular post by Nagarjunan and the debate that ensued. But am not sure how many will take such a 'trouble' and hence my intervention.
The post by Nagarjunan (http://nagarjunan.blogspot.com/2009/02/blog-post_13.html) referred to by Mr. Theonis, contrary to his claim, had nothing to do with Noam Chomsky initially. The post was actually on the proposed barbed wire detention camps by the Sri Lankan government, which Nagarjunan correctly compared with the nightmarish legacy of Nazi detention camps.
The 'debate' turned on the issue of the LTTE in the wake our friend Sugan's comment which ran as follows (actually it was the second comment on the post):
sugan said...
இதை நாம் 1984-ஆம் ஆண்டில் சொன்னோம்! சப்றா- சடில்லாவில் பாலஸ்தீனர்கள் படுகொலையானதை நினைவுகூர்ந்து தமிழ்ப்பிரதேசங்கள் பாலஸ்தீனம் மாதிரி அகதி-முகாம்களாக மாறும், தாக்கிவிட்டு ஓடுகிற hit and run, சே குவேராவின் போகோ தியரி எல்லாம் இலங்கைக்குப் பொருந்தாது, இது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும் என புலிகளின் தாக்குதல்களை விமர்சித்து நீண்டகால மக்கள் யுத்தம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். அப்போது ஜோன் எச் ரீட் மகாவலி புரொஜெக்டிற்கு வந்திருந்த நேரம். சிங்கள மக்கள் மற்றும் இடதுசாரிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தினோம். புலிகள் சொன்னார்கள் - ஆயிரம் பிரச்சாரத்தைவிட ஒரு தாக்குதல் அதனது வேலையைச் செய்யும், விடுதலையின் பெறுமதி மக்களூக்குத் தெரியவேண்டும். நாம் சோத்துப்பார்சல்களாக எள்ளி நகையாடப்பட்டோம்.
கவிஞர் செல்வத்தின் கவிதைவரி இப்படி வரும்.
கானமயிலாட...
துவக்கெடுத்தோம் படை அமைத்தோம்
ஆத்மாக்களைக் குறிவைத்தோம் போ!!
இப்போது எதுவுமே சீர்செய்ய இயலாத அளவிற்கு எல்லாம் முடிந்துவிட்டன. இலக்கியம் மொழி மனிதம் எல்லாம் அழிந்துவிட்டன.
எஸ். ராமகிருஸ்ணனின் நெடுங்குருதி நாவலில் ஒரு பக்கம் வரும், இறந்தவர்களின் துயரைத் தாங்க முடியாமல் மி்ஞ்சியிருந்தவர்கள் படும் வதை, அவர்களை உயிர்ப்பித்துத் தரமுடியாதா என கேட்கும்போது அவர்களுக்காக ஒருநாள் மட்டும் உயிர்ப்பித்துத் தர முன்மொழியப்படுகிறது. மேலும் துயருடன் மிஞ்சியிருப்பவர்களும் ஆற்றில் வீழ்கிறார்கள்.
13/02/09 10:10
to which i responded in dismay thus:
வளர்மதி said...
அச்சோ சுகன்,
ஈழ மக்கள் முன்னெப்போதும் சந்தித்திராத அவலங்களை எதிர்நோக்கியிருக்கையில், அதைப்பற்றி பேசுகையிலும்கூட உங்களுக்கு புலிகள்தாம் இலக்கா?!
ஈழ மக்களின் எல்லாத்துயர்களுக்கும் புலிகள்தாம் காரணம் என்று சொல்ல முனைகிறீர்களா?
புலிகளின் அரசியல்-செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எனக்கும் உண்டு என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும், உங்களைப் போல இச்சமயம் என்னால் பேச இயலவில்லை.
புலிகள் இயக்கத்தினர் மீதான விமர்சனங்களைக் கைவிடாது, எனினும் அவற்றை முன்னிலைப்படுத்தாமல், அவர்களுக்கு தார்மீக ஆதரவையேனும் வழங்க வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்பதே தற்சமயம் எனது நோக்கு. ஆனால், நீங்களோ இன்னமும், ஈழத்தில் ஒரு பிணம் விழுந்தாலும் அதற்கு 1984-ஆம் ஆண்டில் புலிகள் செய்த காரியம்தான் மூலக்காரணம் என்று புலி-எதிர்ப்பு பல்லவி பாடிக்கொண்டிருக்கிறீர்கள். சரி, நீங்கள் அச்சூழலினால் நேரடியாக பாதிப்பிற்குள்ளானவர் என்பதால் அங்ஙனம் பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
காசாவை எடுத்துக்கொள்ளுங்கள். காசாவின் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னும் கொடூரப்படுகொலைகளுக்குப் பின்னும் இஸ்ரேல் அரசு ஹமாஸ் ”தீவிரவாதிகள்”தான் அப்பாவி மக்கள் இறப்பதற்குக் காரணம் என்று சொல்லிவருவது உலகப்பிரசித்தம். ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்தே எமது தாக்குதல் என்று பிரச்சாரம் செய்ததும்/செய்துவருவதும் வெளிப்படை. ஹமாஸ் இயக்கத்தினர் அப்பாவிப் பாலஸ்தீன மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திவருகின்றனர் என்று ஊளையிடுவதும் நாமனைவரும் அறிந்தவையே.
இஸ்ரேலின் இந்த அணுமுறையை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? இஸ்ரேல் அரசின் ‘புல்லாங்குழலாக' ஒத்து ஊதமுடியுமா?
இன்று ஈழ மக்களின் அவலங்கள், ஈழ மக்களின்மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள், ஊடகவியலாளர்மீதான தாக்குதல்கள், ஊடக இருட்டடிப்பு உத்திகள், பொய்ப்பிரச்சாரங்கள் எனப் பலவும் முன்னெப்போதும் விட இஸ்ரேல் அரசின் உத்திகளுக்கு மிக நெருக்கமானவையாக உருவாகியிருப்பதைக் கவனிக்க முடியும்.
ஈழ மக்களின் அவலங்களுடன் உங்களுக்கு உணர்வுரீதியாக நெருக்கமான பிணைப்பு உள்ளதால், சில தவறுகளைச் செய்ய வாய்ப்பு உண்டு எடுத்துக்கொள்வோம்.
காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல்-ஹமாஸ் இருதரப்பினரையும் எப்படி அணுகுவீர்கள் என்று ஒரு கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள். காசா மக்களின் எல்லாத்துயர்களுக்கும் ஹமாஸ் இயக்கத்தினரின் ஆயுதப்போராட்டமே மூலகாரணம் என்று இஸ்ரேல் அரசின் பிரச்சாரத்திற்கு ஒத்து ஊதுவீர்களா?
பொறுமையாகப் பரிசீலித்து பதில் வேண்டுகிறேன்.
13/02/09 13:19
It was at that point that another person intervened to note the interview by Noam Chomsky taken by the Sri Lanka Gaurdian a mouthpiece organ of the Sri Lanka government, from which i am pasting the relevant portion:
ace4metrosexual said...
வளர்மதி,
இது புரிவதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்ததா?
மாலன் / ராம் = சுகன் / சேனன்
இந்து / இந்திய ஊடகங்கள் = சத்தியக்கடதாசி / தேசம்
இப்படியான அகோரமான நிலையிலேதான் நிற்கிறோம்.
நேற்று நோம் ஸோம்ஸ்கியிடம் Sri Lanka Guardian கேட்டிருக்கும் கேள்விகளின் ஒரு பக்கச்சார்புக்கொடூரத்தினை வாசித்தேன்.
...
Then following other comments from friends this was my response in detail:
வளர்மதி said...
ace4metrosexual-ற்கு ...
//வளர்மதி, இது புரிவதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்ததா?//
அப்படி ஏதுமில்லை. சில மாதங்கள் முன்பாகவே வந்துசேர்ந்த புரிதல் இது. எனினும் தொடர்ந்து நிகழ்வுகளின் போக்குகளோடு உரசி சரிபார்த்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை காரணமாக இத்துனை காலம் அமைதியாகவே இருந்தேன்.
ஷோபாசக்தி, ராஜன்குறை, சேனன், இன்னும் பலருடன் மிக நெருக்கமாகப் பழகியிருந்த காரணத்தினாலும் மேற்சொன்னவர்களது அரசியல் நேர்மை மீது நம்பிக்கை இருந்த/இருக்கும் காரணத்தினாலும் மேற்சொன்னவர்கள் ஈழப்பிரச்சினை குறித்து - அது விளையாட்டல்ல, intellectual gymnastics அல்ல என்பதாலும் - பல சந்தர்ப்பங்களில் எனக்கு உடன்பாடு இல்லாதிருந்த போதிலும் அமைதியாக இருக்கவே தலைப்பட்டேன். இப்போது, சமீபத்திய ஈழத்து நிலைமகள், முத்துக்குமாரின் மரணம் இவற்றை கருத்தில் கொண்டே பகிர்வது அவசியம் என்று வெளிப்படுத்த முனைந்தேன். வேறொன்றுமில்லை.
மீண்டும் வலியுறுத்திச் சொல்வதென்றால் சுகன், ஷோபா சக்தி ஆகியோரின் நிலைப்பாடுகள்மீது எனக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே மிகக் கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஷோபா சக்திக்கு தொலைபேசி செய்து அதைப் பதிவும் செய்தேன். என் நண்பர் என்ற முறையில் அக்கறையுடன் அவரது நிலைகளை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளவும் செய்தேன். ஆனால், அவர்கள் தரப்பில் பரிசீலனை இல்லாதிருப்பது ... என்ன சொல்வது :((
மற்றது, சேனன் மீது எனக்கு வேறு காத்திருப்புகள் உண்டு. பொறுத்திருப்பதைத் தவிர வழியில்லை.
அ. மார்க்ஸ் பற்றி இங்கு பேச விருப்பமில்லை.
றஞ்சினிக்கு,
நன்றி.
//இங்கு பல ஜெர்மானியர்களுடன் நாசிகள் பற்றிப்பேசினால் உடன் ரஷ்யாவில் ஸ்ராலின் எவ்வளவு பேரைக் கொன்றார் அல்லது வேறு நாடுகளில் நடந்தவை பற்றிப பேசுவார்கள்.. இயலாத கட்டத்தில் வேறு சிலர் ஹிட்லர் எம் நாட்டுக்காரரில்லை, ஒஸ்றியாவைச் சேர்ந்தவர் என்பார்கள்..//
இக்கருத்தையே நானும் வலியுறுத்த முனைந்தேன். சிங்கள அரச-இராணுவ பயங்கரவாதத்துடன் விடுதலை புலிகளின் வன்முறை - கவனிக்க; நண்பர்கள் கவனிக்க; வன்முறை நடவடிக்கைகள்; விடுதலையின் பேராலான வன்முறைகள் - அவற்றில் நம் போன்றோருக்கு ஒரு உடன்பாடுமில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியறுத்திக்கொண்டிருக்க
வேண்டுமென்பதில்லை; பல காலமாக பல நோக்குகிலிருந்து பேசியாகிவிட்டது; இன்றும் பேச வேண்டிய தேவையும் இருக்கிறது என்பதையும் மறுப்பதிற்கில்லை.
எனினும் சிங்கள அரச பயங்கரவாதத்தினை விடுதலைப்புலிகளின் வன்முறைகளோடு நிறையாக ஒப்பிட்டு பேசுவதை யாரேனும் ஒப்புக் கொள்ள முடியுமா?
அரசு பயங்கரவாதத்தின் எதிராகத் தோன்றியதே ”விடுதலை” இயக்கங்களின் வன்முறை நடவடிக்கைகள் என்பதை எத்துனை முறை விளக்கிக்கொண்டிருப்பது!
ஆனால் இரண்டையும் சமப்படுத்தும் முயற்சிகளை என்னென்பது?!
இதற்கு சுகனும் அவரது சகாக்களும் விளக்கம் கொடுத்தால் மிக்க நன்று.
அன்புடன் பெருந்தேவி அவர்களுக்கு,
உங்களுக்கு என்னை நினைவிருக்குமா என்பதறியேன். நாம் சந்தித்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. அதிருக்கட்டும்.
ஊடகத்துறையினரின் மமதையை எப்படி எதிர்கொள்வது என்ற உங்கள் கேள்விக்கு வருகிறேன். ”இந்து” ஆங்கில இதழை சில மாதங்களுக்கு முன் சில அமைப்பினர் எரித்து போராட்டம் நடத்தியபோது திருவாளர் ராம் தெரிவித்த கருத்தாவது: “காசு கொடுத்து வாங்கித்தானே எரிக்கிறார்கள். தாராளமாகச் செய்யட்டும்,” என்பதே.
வேறுவழிகளில் செய்தால் என்ன நடக்கும் :)
நான் சொல்வது ”சட்டப்பூர்வமான” வழிகளில். நாளை அதற்கான முன்முயற்சிகளை எடுக்க இருக்கிறோம். தற்சமயம் அதை இங்கு வெளிப்படுத்த இயலாது.
நீங்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசில் இருப்பதால் ஒரு ஆலோசனை :) -
நோம் சாம்ஸ்கிக்கு ”இந்து” ராமின் அரசியலைப் புரிய வைத்து, அவர் இந்தியாவில் தாம் சாம்ஸ்கியின் குடும்ப நண்பர் என்று அலட்டித்திரிவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கலாமே!
ராஜன்குறை,
தங்களது தொடர்ந்த பாராட்டுகளுக்கு நன்றிகள் :) இங்கு தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து:
//இன்று இலங்கையிலோ, காஸாவிலோ நடப்பதற்கு அரசியல்ரீதியாக தீர்வை வலியுறுத்துவது என்றால் என்ன, அதை யார் செய்ய முடியும், அதில் "நாம்" என்று அடையாளம் கொள்ளும் எதுவும் என்ன செய்யமுடியும் என்று அவர் இத்தருணத்தில் சிந்திக்க முன்வரவேண்டும்.//
இது தொடர்பாக எனது கருத்துக்களை தற்சமயம் விரிவாக வைக்க இயலவில்லையெனினும் அவ்வப்போது தோன்றியவற்றை என் வலைப்பக்கத்தில் முன்மொழிந்து வந்திருக்கிறேன் சமீப காலமாக.
என்து மிக முக்கியமான மொழிதல்களில் சில:
1. விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீதான விமர்சனங்களைக் கைவிடாமல், ஆனால், அவற்றை முன்நிபந்தனையாக முன்நிறுத்தாமல், தற்சமயம் அவர்களுக்கு, ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களும் (”நாம்” என நான் கருத்தில் கொள்வது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பின்னவரைத்தாம்; அதற்கான அரசியல் தேவை இங்குள்ளது - அதாவது தமிழகத்தில். அவர்களை மட்டுமல்ல ஈழத்தில் ஆயுதம் ஏந்திய எக்குழுவினரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயலும் இந்திய மேலாண்மைக் கருத்தியலை எதிர்கொள்ள வேண்டிய தேவையும், குறிப்பாக, விடுதலைப்புலிகளை ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலைக்குற்றவாளிகள் என்ற பிம்பத்தை உடைத்தெறிய வேண்டிய தேவையும் இங்கு களைய வேண்டியிருக்கிறது. இதை எத்துனை effective-ஆக செய்கிறோமோ அந்தளவுக்கு ஈழப்போராட்டத்திற்கு தமிழக மக்களின் ஆதரவைப் பெருகச் செய்ய முடியும் என்று கருதுகிறேன்) தார்மீக ரீதியிலான ஆதரவையாவது அளிக்க முன்வரவேண்டும்.
2. சிங்கள இனவெறிப் படுகொலைகள் genocide என்ற வகையில் சர்வதேச சமூகத்தின் முன்வைக்கப்பட்டு கண்டனத்திற்கும் UN மற்றும் பிற சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் குறுக்கீட்டிற்கும் வழிவகைகள் செய்ய வேண்டும்.
3. ஈழம் ஒரு தனி நாடாக வேண்டுமா என்பது குறித்து மேற்சொன்ன சர்வதேச அமைப்புகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒரு referendum நடத்தப்பட வேண்டும்.
இவற்றில் தங்களுக்கு ஏதும் மாறுபாடு இருந்தால் தெரிவியுங்கள். மேற்கொண்டு ஆலோசனைகள் இருந்தாலும்.
ஆனால் கருணா-பிள்ளையான் தரப்பினரின் அப்பட்டமான துரோகச் செயல்பாடுகளை “தலித்” அரசியல் என்ற போர்வையில் ஆதரித்து விடுதலைப்புலிகளை ஒரு முக்கிய காரணியாக நிராகரிப்பது மிக மிக அற்பத்தனமான அரசியல் என்றும் கருதுகிறேன்.
இது குறித்த தங்களது பார்வை என்ன?
சிங்கள இதழாளர் லசந்தவின் படுகொலையைச் செய்தவர்கள் சிங்களத்தரப்பினர் அல்ல; கருணா தரப்பினர்தாம் என்பதையாவது தாங்களோ, எதற்கெடுத்தாலும் ”இதையேதாம் யாம் 1984-லே யாம் முன்பே சொன்னோம்” என்றும் பாடம் ஒப்புவிக்கும் சுகனும் அறிவீர்களா? இலங்கையில் “நீண்ட கால மக்கள்-யுத்தப் பாதையை வலியுறுத்தினோம்” என்றும் சொல்லும் சுகனின் கருத்து உங்களுக்கு மிகுந்த கவனத்திற்கு உரியதாகப்படுவதாயின் எப்படி என விளக்க வேண்டுகிறேன்.
இலங்கையில், சீனாவில் நடந்தது போன்ற “நீண்ட கால மக்கள் யுத்தம்” என்பது நடைபெறச் சாத்தியம் உண்டா?? சீனா ஒரு மிகப் பெரும் நிலப்பரப்பு. அங்கு மாவோ அத்தகைய யுத்த தந்திரத்தை வைத்தது மிகுந்த அரசியல்-. யுத்த- காரணங்கள் கருதி.
அந்த உதவாப் பெருங்கதைகளை 1984-இல் தாம் அல்லது தாம் சார்ந்த இயக்கம் முன்வைத்தது என்று நினைவு கூர்ந்து சுகன் சொல்ல வருவது என்ன? முரட்டு புலி எதிர்ப்பு என்பதற்கு மேலாக வேறென்ன? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புலி எதிர்ப்பாளர்கள் செய்து கிழித்தது என்ன? இந்திய ஆட்சியாளர்களுடனும் இலங்கை ஆட்சியாளர்களுடனும் கூடிக்குலவியதற்கும் ஒரு விடுதலைப்போரைக் காட்டிக் கொடுத்ததற்கும் மேலாக இத்தரப்பினர் செய்தது என்ன?
புலிகளும் இந்திய-சிங்கள அரசுடன் பல சந்தர்ப்பங்களில் சமரசம் செய்திருக்கிறார்கள் என்று சப்பைக்கட்டுக் கட்ட வேண்டாம். தனி ஈழம் அமைந்தாலும் அது இந்திய பிராந்திய மேலாதிக்கத்திற்கு ஆட்பட்டதாக, அல்லது அமெரிக்க மேலாண்மைக்கு அடிபணிந்ததாக, இருக்கும் என்பதைக் காரணம் காட்டி அதை நிராகரிக்க வேண்டாம். அதையேதான் இன்று சிங்கள அரசும் செய்துகொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
அதை வலியுறுத்தும் நிலைப்பாடு, மேற்சொன்ன ஆதிக்கங்களின் கீழ், சிங்கள இனவெறி அரசை ஒப்புக்கொள்வேன், கருணா- பிள்ளையான் போன்ற காட்டிக்கொடுப்பாளர்களை - படுகொலையாளர்களை ”தலித் அரசியல்” என்ற ஒப்புப் போர்வையின் கீழ் ஒப்புக்கொள்வேன், ஆனால், ஒரு மிகச் சாதாரண தேசிய விடுதலைப்போராட்டத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பதற்கு ஒப்பாகும்.
ராஜன் ... தேசியம் குறித்த எனது தேடல்களை நீஙகள் நன்கு அறிவீர்கள்.
அவற்றையும் மனதில் வைத்து இக்கருத்துக்களை பரிசீலனை செய்யுங்கள்.
சுகன், ஷோபா சக்தி, அ. மார்க்ஸ் இத்தரப்பினர் இன்று எடுத்திருக்கும் சிங்கள ஆதரவு நிலைப்பாடு மிகக் கேவலமானது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அடடா ... பாரடா ... இவன் எங்களை சிங்கள ஆதரவு நிலைப்பாடு என்று சொல்கிறான் என்று மேற்சொன்னவர்கள் நக்கலடித்தார்களானால் (பதறக்கூட மாட்டார்கள் ... நக்கலுக்கு மேலாக கருத்தாடலுக்குத் தயாரான நபர்கள் கூட இல்லை) ரயாகரன், யமுனா அல்ல வளர்மதி என்பதை மறக்க வேண்டாம் என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மிக்க நன்றிகள்.
தங்களதும் பிற எவரானதும் பகிர்தலுக்கு தயாராக காத்திருக்கிறேன்.
குறிப்பிட மறந்துட்டேன் ராஜன்.
காசா நிலப்பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் மீது இஸ்ரேல் கைகாட்டி தொடர்ந்து குற்றம் சாட்டுவதற்கும் சிறீலங்கா அரசு அதே போன்று புலிகள் மீது கைகாட்டி குற்றம் சாட்டுவதற்கு ஒப்புமை காட்டி சற்று விலகி நின்று சிந்தித்துப் பார்க்கவே சுகனைக் கோரியிருந்தேன்.
மற்றபடி, நீங்கள் கூற முனைந்தது போல, இருவரில் எவரையேனும் குற்றவாளியாக்கு என்று பிடித்து நிறுத்துவது எனது நோக்கமல்ல. காசாவில் அங்கனம் பேசுவது சாத்தியமில்லை என்பதையே சுட்ட முனைந்தேன்.
காசாவில் அங்ஙனம் சுட்ட முடியாதென்றால் ஈழப்போரில் மட்டும் சுகன் புலிகளை கைகாட்டி குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எங்ஙனம்? அதைச் சுட்டவே முனைந்தேன்.
எதிர் முனைகளுக்குள் மாட்டிக் கொள்வதையும் எதிர்-அரசியலையும், சில தெளிவுகளின் பிற்பாடு தொடர்ந்து பேசியும் எழுதியும் செயல்பட்டும் வருகிறேன். அதை எனது எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு தெரியும். நீங்கள் வாசிக்கிறீர்களா என்பதறியேன்.
அன்புடன்
வளர்...
13/02/09 19:30
It was at this point that Perundevi developed my idea of reacting against the media more concretely to send our objection to Noam Chomsky which we pursued and many friends participated with enthusiasm. In fact, after this point the sharings and comments by all those who were following the exchanges focused on how to draft the "memorandum" that we were thinking to send to Chomsky. However, Sugan or his friends never took the initiative nor showed any interest in attempt to write back to Chomsky. Instead he simply retorted back to his initial position and totally out of context sectarian debate on LTTE in the following comment:
sugan said...
இனிய வளர்!
நான் மீண்டும் 1984-இல் என்று சொல்லி ஆரம்பிக்கப்போவதில்லை!
அது மிகப்பெரிய வன்முறை இல்லையா?
அரசியல் ஆய்வு, இலக்கியம், மனிதம் எல்லாம் முடிந்துவிட்டது என்று சொன்னேன், புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். துயரங்களைச் சொல்ல மொழி முடிந்துவிட்டது எனச் சொன்னேன்!
எஸ்.ரா.வின் நெடுங்குருதி உதாரணம் சொன்னேன், மேலும் இலக்கிய உதாரணம் கேட்டால் நான் எங்கு போவேன்!
பாரத தர்மம் நாடகம் பார்த்தீர்களா?
பாண்டவர் தம் குழந்தைகளை அரக்கு மாளிகையிலிருந்து அகற்றி அதற்குப் பதிலாக சண்டாளனின் குழந்தைகளை அங்கு தீக்கு இரையாக கொடுத்தபோது (குந்திக்கு இது எற்கனவே தெரியும்) குந்தியிடம் சண்டாளனின் மனைவி தன் நெஞ்சில் அறைந்து நியாயம் கேட்கிற உவமைகள் எல்லாம் தேடித்தேடிச் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா,
நம் துயரத்தை எப்படி நான் உங்களுக்குப் புரிய வைப்பேன்.
கனத்த மெளனம் இறுக்கமான மெளனம் மோனம்!
எல்லோரிடமும் அனுதாபத்தையும் அச்சத்தையும் உருவாக்கும் இழிந்த நிலைக்கு வந்து விட்டோம். இனியென்ன! பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்னையில் எனது 'நிலைப்பாட்டை' இப்போது சுருக்கமாகவோ விரிவாகவோ பேசும் மனநிலையில் இல்லை. பின்னர் நேரில் அல்லது ஊடகத்தில் பேசலாம்.
மோசே தயான் காலம், ரபீன் காலம், சிமோன் பெரஸ் காலம், நெட்டன்யாகூ காலம் இப்படி நீங்கள் பேச நான் கேட்டுக்கொண்டிருப்பேன்!
நான் மீண்டும் சொல்லுவேன் ;1984 இல் .....
நாகார்ஜுனன் - 1998-இல் ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப்பின் அரசு வவுனியாவில்
உருவாக்கிய பூந்தோட்டம் அகதி முகாம் பத்து வருடங்களின் பின் இப்போதும் இயங்குகிறது. உலகத்தில் கேவலமான வாழ்க்கை உண்டென்கில் அதற்கு உதாரணம் பூந்தோட்டம் அகதி முகாம்தான்.
13/02/09 22:57
I had my response posted there and it soon turned out another debate between the earlier mentioned person and Sugan. However, since most of us felt to drop it and concentrate on the draft to Chomsky it stopped.
My point here is, the portion from Mr. Theonis' comment is a deliberate and sectarian way of twisting a complex debate to his own end. I can understand that it is the usual way of sectarian people who always want to prove that they are the right people and that they stand on the side of the "historical victims".
I just wish to register here that Mr. Theonis' way of twisting the facts of a very recent "debate" is totally unethical and sectarian and differs not much from the powers that be.
Thanks
Valarmathi.
Apr 21, 2009
Subscribe to:
Posts (Atom)
