Feb 2, 2009

முத்துக்குமார் மரணத்திற்கு இப்படியும் ஒரு எதிர்வினை !

இன்று மதியம் நண்பர் ஒருவர் அலைபேசியில் சொன்ன செய்தியைத் தொடர நேர்ந்தது. அவர் தந்த எண்களில் பின் தொடர்ந்ததில் கிடைத்த செய்தி முற்றிலும் எதிர்பாராதது.

செங்கல்பட்டில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் உள்ளவர்களில் இருவர் கதிர் மற்றும் சந்திரகுமார். இருவரும் சற்றே மனநலம் குன்றியவர்கள். ஈழம் குறித்த செய்திகளைக் கேட்டாலே மிகுந்த பதட்டமடைந்து விடக்கூடியவர்கள்.

யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யக் கூடாத இயலாத நிலையில் இருக்கும் இவ்விருவரையும் சில மாதங்களுக்கு் முன் பூந்தமல்லி கடுங்காவல் முகாமுக்கு மாற்றியுள்ளனர். செங்கல்பட்டு முகாமில் இருந்த அவர்களது உறவினர்களின் அயராத முயற்சியில் மீண்டும் செங்கல்பட்டு முகாமுக்கு திரும்பச் சேர்ந்திருக்கிறார்கள்.

கடந்த வாரம் முழுக்க ஈழம் குறித்த அவலச் செய்திகளைக் கேள்வியுற்று மிகுந்த பதட்ட நிலையில் இருந்த கதிர் இரு நாட்களுக்கு முன்பாக 40 உறக்க மாத்திரைகளை விழுங்கிவிட ஒருவழியாக உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

உடல் நிலை தேறி வந்தவருக்கு நேற்று நிகழ்ந்த கொடூரத்தை என்னென்பது :(((

செங்கல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் திடீரென்று மருத்துவமனைக்குள் நுழைந்து கதிரை பூட்ஸ் கால்களால் உதைத்து கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.

தாக்குகையில் அவர்கள் சொன்ன விடயங்கள்:

1. “புலிகள் என்ன மசுராடா?”

2. "ராஜீவ் காந்தியைக் கொன்னது நீங்க தானடா ... ஓடுங்கடா உங்க ஊருக்கு.”

3. "ஈழத் தமிழன்னா பெரிய இவன்னு நினைப்பா?”

இப்படியான வசவுகளை உதிர்த்துக் கொண்டே எந்த விதமான எதிர்வினையும் புரியச் சக்தியற்றுக் கிடந்த கதிரை கடுமையாக தாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர் அந்த போலீசு சிங்கங்கள்!

இன்று காலை தொடங்கி அவ்விரு போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மருத்துவமனை முன்பாக ஈழ மக்கள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முத்துக்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து முதற்கட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை கருணாநிதி அரசு எடுக்கத் தொடங்கியுள்ள அதே போதில் போலீஸ் வெறியர்களின் வக்கிரம் இந்த அளவுக்கு சென்றுள்ளது.

இனிவரும் நாட்கள் எப்படியோ!!!

3 comments:

வளர்மதி said...

உறக்கக் கலக்கத்தில் இரண்டு பின்னூட்டங்களை தவறுதலாக டெலிட் செய்துவிட்டேன்.

மன்னிக்க வேண்டுகிறேன்.

Jagan said...

முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

காரூரன் said...

காசுக்கு மார் இருக்கும் சில காவல் துறையினர் இப்படி நடந்து கொள்வது வருந்த வைக்கின்றது. நானும் மண்டப முகாம் சென்று அகதிகளை சந்தித்திருக்கின்றேன். முடிந்தால் இவர்கள் பெயர் தெரிந்தால் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

Post a Comment

Recent Posts